சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Monday, 18 March 2013

அம்பத்தூர் சபரிமலைல் வழிபடும் முறைகள்



·       கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்
·       நெற்றியில் ஆண்கள் திருநீறும் சந்தனமும் , பெண்கள் குங்குமம் இல்லாமல் வழிபடக்கூடாது.
·       கோவில்  வாயிலில் நுழையும் முன் நீரால் கை, கால்களை அலம்பிக் கொண்டு பிறகு செல்ல வேண்டும். தலையில் தண்ணிரை தெளித்துகொள்ளகூடாது,
·       கோவில்  உள்ளே சென்றவுடன் யாரிடமும் பேசாமல் இறைவனை மட்டும் மனதில் பிராத்தனை செய்ய வேண்டும்.
·       இக்கோவிலில் இரண்டு வழிகள் உள்ளன ஒன்று ஏறும்  வழி  மற்றது இறங்கும் வழி ஏறும்போதும் இறங்கும்போதும் அந்தந்த  வழிகளை மட்டும் உபயோகிக்க வேண்டும் 
·       பலிபீடத்துக்கு அருகில் சென்று நம்மிடமுள்ள தீய குணங்களை பலிகொடுத்தாக வணங்க வேண்டும்.

·       அதன் பிறகு ஸ்ரீ  ஐயப்பனை   வணங்க வேண்டும்.

·       மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.

·       அர்ச்சனைகள் செய்து ஆரத்தி காட்டியதும் தீபத்தை பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

·       மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது. 

·       கோவிலில் மணி அடிக்கும் போது வெளிச்செல்லக்கூடாது

·       மூலவர் மற்றும் பிற சன்னதிகளுக்கு எதிரே உள்ள நந்தி,மயில்,காகம், எலி,போன்ற வாகனங்களுக்கு குறுக்கே செல்லகூடாது . 

·       கோயிலுக்குள் சுற்றும் போது வேகமாக நடக்காமல் மெதுவாக      நடக்க வேண்டும்.

·       கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது

·       கோவிலின் முன்புறம் அமைந்துள்ள கொடிமரத்தின் முன்பு மட்டும் தான் விழுந்து வணங்க வேண்டும்.

·       மற்ற சன்னதிகளில் விழுந்து வணங்ககூடாது 

·       பெண்கள் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கக்கூடாது. ஆனால் ஆண்கள் சாஷ்டாங்கமாகத்தான் விழுந்து வணங்க வேண்டும்

·       கோவிலில் கடவுளை தவிர யாரையும் வணங்க கூடாது. அப்படி செய்வது கடவுளை அவமதிப்பது போலாகும்.

·       கோவிலுள் விழுந்து வணங்கும்போது நேராக படுத்து வணங்க கூடாது. குறுக்காக படுத்து வணங்க வேண்டும். அப்போதுதான் இறைவனை தரிசிக்க வரும் ஞானிகள் மற்றும் சித்தர்கள் நம்மை தாண்டி செல்வதுபோல அமையும். இது அவர்களின் அருள் கிடைக்கும்.
·       சிறிது நேரம் கோயிலில் உட்கார்ந்து கண்மூடி பகவானை நினைத்துக் கொள்ள வேண்டும். மறுபடியும் மானசிகமாக தரிசித்துவிட்டு உத்தரவு பெற்றுக் கொண்டு கிளம்ப வேண்டும்.
·       கோவிலில் கடவுளுக்கு சாத்திய மாலையை நமக்கு அணிவித்தபின் திரும்ப வீட்டில் அதனை பத்திரமாக வைக்க வேண்டுமே அன்றி வீட்டில் உள்ள சாமி படத்திற்கு சாத்த கூடாது
·       சபரிமலையில்  நடை திறந்து இருக்கும் நாட்களில் இங்கும் நடைதிறந்து இருக்கும் ஆண் பக்தர்கள் வயதுவரம் ஏதும் இன்றி இருமுடியுடன் இங்கு 18ம்படிஏறலாம்.
·       பெண்கள்10வயதுக்குள்ளும் ,50 வயதுக்குமேலும் இருமுடியுடன் 18ம் படி ஏறலாம்..
·       சாதாரண வழியாக பெண்கள் செல்வதற்கு வயதுவரம் ஏதும் இல்லை 

No comments:

Post a Comment