சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Wednesday, 8 May 2013

நல்லதை மட்டும் சிந்தியுங்கள்


உறுதியான பாறை புயல்காற்றுக்கும் அசைந்து கொடுப்பதில்லை. அதுபோல அறிவாளியும், புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அசைந்து கொடுக்கமாட்டான்.

உடல் நோய் வரலாம். மனநோய் வரக்கூடாது. கவலை, துன்பம், வெறுப்பால், மனம் வாடி விட்டால் வாழ்வின் போக்கே மாறி விடும்.

முட்டாளின் தோழமையை விட ஒருவன் தனியாக வாழ்வது எவ்வளவோ மேலானது.

மனதில் தீய எண்ணங்களை நுழைய விட்டால் சேற்றில் விழுந்த யானை போலாகி விடும். நல்ல எண்ணங்களை மட்டுமே சிந்திப்பது அவசியம்.

பொருளற்ற ஆயிரம் சொற்கள் பேசுவதைக் காட்டிலும் பொருளுடைய ஒருசொல் உயர்வானது.

நல்லவழியில் நிர்வகிக்கப்பட்ட மனம், செய்யும் உதவிக்கு அளவே இருக்காது. தாயோ, தந்தையோ, உறவினரோ கூட இந்தளவு உதவி செய்ய முடியாது.

தீய எண்ணத்தை மனதில் நினைத்தால் கூட அதற்கான தண்டனையில் இருந்து மனிதன் தப்பிக்க முடியாது.
தூய்மையான எண்ணம் கொண்டவனை நிழல் போல மகிழ்ச்சி பின்தொடரும்.

No comments:

Post a Comment