சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Friday, 15 February 2013

Ayyappan Mantra


ஸ்ரீ அய்யப்பன் காயத்ரி 

ஓம் பூதநாதாய வித்மஹே
பவநந்த நாய தீமஹி
தந்நோ சாஸ்தா; ப்ரசோதயாத்.


மாலைஅணியும்போதுசொல்லவேண்டியமந்திரம்


ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்

வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்

சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்

சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்

சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்

சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம

அகஸ்தியர் அருளிய ஐயப்ப மாலை


1. விருப்பமும் வெறுப்புமின்றி வினைப் பயன் எல்லா முந்தன்
திருப்ப தம் தன்னில் வைத்து திருப்தியும் திறனு முற்று
ஒருப்பவர் மீதும் த்வேஷம் உற்றிடாது அன்பே பூண்டுன்
திருப்பணி செய்து வாழத் திருவருள் செய்குவாயே

2. வையமும் வானும் வாழ மறை முதல் தருமம் வாழ
செய்யும் நற் செயல்கள் வாழத் திருவருள் விளக்கம் வாழ
நையும் ஊழுடையார் தத்தம் நலிவகன்றினிது வாழ
ஐயனாய் அப்பனானான அவர் பதம் வணக்கம் செய்வோம்

3. மெய்யெல்லாம் திரு நீறாக வழியெலாம் அருள் நீராக
பொய்யில்லா மனத்தராகி புலனெல்லாம் ஒருத்தராகி
வெய்ய வேறற்றவுள்ள விளக்க முற்றான் பால் விம்மி
ஐயனே ஐயப்பா என்பார் அவர் பாதம் வணக்கம் செய்வோம்


No comments:

Post a Comment