உறுதியான பாறை புயல்காற்றுக்கும் அசைந்து கொடுப்பதில்லை. அதுபோல அறிவாளியும், புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அசைந்து கொடுக்கமாட்டான்.
உடல் நோய் வரலாம். மனநோய் வரக்கூடாது. கவலை, துன்பம், வெறுப்பால், மனம் வாடி விட்டால் வாழ்வின் போக்கே மாறி விடும்.
முட்டாளின் தோழமையை விட ஒருவன் தனியாக வாழ்வது எவ்வளவோ மேலானது.
மனதில் தீய எண்ணங்களை நுழைய விட்டால் சேற்றில் விழுந்த யானை போலாகி விடும். நல்ல எண்ணங்களை மட்டுமே சிந்திப்பது அவசியம்.
பொருளற்ற ஆயிரம் சொற்கள் பேசுவதைக் காட்டிலும் பொருளுடைய ஒருசொல் உயர்வானது.
நல்லவழியில் நிர்வகிக்கப்பட்ட மனம், செய்யும் உதவிக்கு அளவே இருக்காது. தாயோ, தந்தையோ, உறவினரோ கூட இந்தளவு உதவி செய்ய முடியாது.
தீய எண்ணத்தை மனதில் நினைத்தால் கூட அதற்கான தண்டனையில் இருந்து மனிதன் தப்பிக்க முடியாது.
தூய்மையான எண்ணம் கொண்டவனை நிழல் போல மகிழ்ச்சி பின்தொடரும்.
No comments:
Post a Comment