· கோயிலுக்குச் செல்லும் போது
உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்
· நெற்றியில் ஆண்கள் திருநீறும்
சந்தனமும் , பெண்கள் குங்குமம் இல்லாமல் வழிபடக்கூடாது.
· கோவில் வாயிலில் நுழையும்
முன் நீரால் கை, கால்களை அலம்பிக் கொண்டு பிறகு செல்ல வேண்டும். தலையில் தண்ணிரை தெளித்துகொள்ளகூடாது,
· கோவில் உள்ளே சென்றவுடன் யாரிடமும் பேசாமல் இறைவனை மட்டும்
மனதில் பிராத்தனை செய்ய வேண்டும்.
· இக்கோவிலில்
இரண்டு வழிகள் உள்ளன ஒன்று ஏறும் வழி மற்றது இறங்கும் வழி ஏறும்போதும்
இறங்கும்போதும் அந்தந்த வழிகளை மட்டும் உபயோகிக்க வேண்டும்
· பலிபீடத்துக்கு அருகில் சென்று
நம்மிடமுள்ள தீய குணங்களை பலிகொடுத்தாக வணங்க வேண்டும்.
· அதன் பிறகு ஸ்ரீ ஐயப்பனை
வணங்க வேண்டும்.
· மேலே துண்டு
போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.
· அர்ச்சனைகள் செய்து ஆரத்தி
காட்டியதும் தீபத்தை பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.
· மூலவர் மற்றும்
அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.
· கோவிலில் மணி அடிக்கும் போது
வெளிச்செல்லக்கூடாது
· மூலவர் மற்றும்
பிற சன்னதிகளுக்கு எதிரே உள்ள நந்தி,மயில்,காகம், எலி,போன்ற வாகனங்களுக்கு குறுக்கே
செல்லகூடாது .
· கோயிலுக்குள் சுற்றும் போது
வேகமாக நடக்காமல் மெதுவாக நடக்க வேண்டும்.
· கொடி மரம், நந்தி,
கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது
· கோவிலின் முன்புறம்
அமைந்துள்ள கொடிமரத்தின் முன்பு மட்டும் தான் விழுந்து வணங்க வேண்டும்.
· மற்ற சன்னதிகளில்
விழுந்து வணங்ககூடாது
· பெண்கள் சாஷ்டாங்கமாக விழுந்து
வணங்கக்கூடாது. ஆனால் ஆண்கள் சாஷ்டாங்கமாகத்தான் விழுந்து வணங்க வேண்டும்
· கோவிலில் கடவுளை தவிர யாரையும்
வணங்க கூடாது. அப்படி செய்வது கடவுளை அவமதிப்பது போலாகும்.
· கோவிலுள் விழுந்து வணங்கும்போது
நேராக படுத்து வணங்க கூடாது. குறுக்காக படுத்து வணங்க வேண்டும். அப்போதுதான் இறைவனை
தரிசிக்க வரும் ஞானிகள் மற்றும் சித்தர்கள் நம்மை தாண்டி செல்வதுபோல அமையும். இது அவர்களின்
அருள் கிடைக்கும்.
· சிறிது நேரம் கோயிலில் உட்கார்ந்து
கண்மூடி பகவானை நினைத்துக் கொள்ள வேண்டும். மறுபடியும் மானசிகமாக தரிசித்துவிட்டு உத்தரவு
பெற்றுக் கொண்டு கிளம்ப வேண்டும்.
·
கோவிலில் கடவுளுக்கு சாத்திய மாலையை நமக்கு அணிவித்தபின்
திரும்ப வீட்டில் அதனை பத்திரமாக வைக்க வேண்டுமே அன்றி வீட்டில் உள்ள சாமி படத்திற்கு
சாத்த கூடாது
·
சபரிமலையில் நடை திறந்து இருக்கும்
நாட்களில் இங்கும் நடைதிறந்து இருக்கும் ஆண் பக்தர்கள் வயதுவரம் ஏதும் இன்றி இருமுடியுடன்
இங்கு 18ம்படிஏறலாம்.
· பெண்கள்10வயதுக்குள்ளும் ,50
வயதுக்குமேலும் இருமுடியுடன் 18ம் படி ஏறலாம்..
· சாதாரண வழியாக
பெண்கள் செல்வதற்கு வயதுவரம் ஏதும் இல்லை
No comments:
Post a Comment