Wednesday, 30 January 2013

விளக்கு ஏற்றும் முறை



ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும். 

இரு முகம் ஏற்றினால் - குடும்ப ஒற்றுமை கிட்டும். 

முன்று முகம் ஏற்றினால்- புத்திரதோஷம் நீங்கும். 

நான்கு முகம் ஏற்றினால் - பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும். 

ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும்,ஐஸ்வர்யம் பெருகும்.

விளக்கேற்றும் திசை
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி 
மேற்கு - கடன், தோஷம் நீங்கும் 
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)


எண்ணெயின் பலன்
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும். 
நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும் 
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும் 
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும் 
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி 
விளக்கெண்ணெய்- புகழ் தரும் 
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்

விளக்கின் தன்மை 
மண்ணால் செய்யப்பட்ட விளக்கு – பீடை விலகும் 
வெள்ளி விளக்கு – திருமகள் அருள் கிடைக்கும் 
பஞ்ச லோக விளக்கு – தேவதை வசியம் உண்டாகும் 
வெண்கல விளக்கு - ஆரோக்கியம் உண்டாகும் 
இரும்பு விளக்கு – சனி கிரக தோஷம் விலகும்.

2 comments:

  1. vilakkin mugam enthapakkam irukkavendum athavuthu vilakkin mugam nammai parpathu pola illai iraivanai parppathu pola perumbalum makkal thannai parpathu pol than etruginrana

    ReplyDelete